Sunday 20 May 2018

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்




பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.  பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 16) வெளியிடப்பட்டன. 

மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்திருந்த செல்லிடப்பேசி எண்களுக்கு மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் வகையில் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. 

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாகவும் திங்கள்கிழமை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும், திங்கள்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாணவர்களும், தனித் தேர்வர்களும் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டும் இச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

10, 11,12 மாணவர்கள் இனி புதிய பாடத்திட்டத்தில் தான் தேர்வு எழுத முடியும்

மாணவர்கள் இனி புதிய பாடத்திட்டத்தில் தான் தேர்வு எழுத முடியும்